வஜ்ஜிரவல்லி எனும் பிரண்டையின் மகத்துவம் அறிவோம் | We know the greatness of the brand Vajjiravalli
வஜ்ஜிரவல்லி எனும் பிரண்டையின் மகத்துவம் அறிவோம்..!
We know the greatness of the brand Vajjiravalli..!
★ பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாட்டிற்கு இது அரு மருந்து.
★ வைரம் பிரண்டை சாற்றின் பொடி ஆகும் என்று போகர் சித்தர் பெருமான் கூறினார்.
★ உலகிலேயே கடினமான பொருள் வைரம். வைரத்தில் உள்ள கார்பன் பிணைப்பை உடைக்கும் தன்மை பிரண்டை சாறுக்கு உண்டு!
★ இருபது நாளில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்ட பின்பு கால் வலி, கை வலி சுத்தமாக இருக்காது என்பது மட்டும் அல்ல. உடல் சோர்வு அறவே இல்லாமல் செய்து விடும் பிரண்டை.
★ ஏர் உழும் காலங்களில் கால் வலியை போக்க பிரண்டை, கொத்தமல்லித்தழை, தூதுவளை, கறிவேப்பிலை சேர்த்து துவையல் செய்து தந்த பொற்காலத்தை நாம் மறந்து விட்டோம்.
★ பிரண்டையில் உள்ள மிகையான சுண்ணாம்பு சத்து(கால்சியம்) தான் எலும்பு மஞ்ஞையில் திரவம் அதிகமாக சுரக்க செய்யும்.
★ இது மட்டும் இன்றி வாயில் ஆரம்பித்து ஆசனவாய் வரை உருவாகும் 300 விதமான நோய்க்கும் சிறந்த மருந்து பிரண்டை என போகர் நிகண்டுவில் குறிப்பிடப் பட்டுள்ளது.
★ குறிப்பாக சிறுகுடலில் ஏற்படும் குறைபாடுகள் பிரண்டையால் உடனடியாக நிவர்த்தி ஆகும்.
★ பிரண்டை உப்பை சுமார் 300 மி.கி. தேனில் அல்லது நெய்யில் தினமும் சாப்பிட்டு வர உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றப்பட்டு உடல் குறைப்பு ஏற்படுகிறது.
★ சிறுகுடல் மற்றும் வயிற்றில் உள்ள வாயு முழுவதும் வெளியேறுவதை உடனடியாக உணரலாம். பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இடுப்புவலி மற்றும் வயிற்று வலிக்கு பிரண்டை துவையல் அல்லது உப்பை பயன்படுத்தினால் வலி இல்லாமல் போகும்.
★ பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாட்டிற்கு இது அரு மருந்து.
★ நிறைய குறைபாடுகள் பிரண்டையால் குணமாகும் போது எதற்கு கால்சியம் மாத்திரை சாப்பிட்டு சிறுநீரகத்தை டயாலிசிஸ் பண்ண வேண்டும் என்று சம்மந்தப்பட்டவர்கள் யோசியுங்கள்.
பிரண்டையின் மற்றொரு பெயர் "வஜ்ஜிரவல்லி" தேகத்தை வஜ்சிரம் ஆக்கும்.
Comments
Post a Comment